• Breaking News

    வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய இராஜகோபுரத்திற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு!(படங்கள் )

    வவுனியாவில் பிரசித்திபெற்ற கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு (அடிக்கல் நாட்டல் ) நேற்று  (16.09.2016)  இடம்பெற்றது.
    பழம் பெரும் ஆலயமான இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா சிறப்புற இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.  இந்த நிலையில் அக்கிராமத்தவர்கள் ஒன்று திரண்டு இராஜகோபுரததிற்கான அடிக்கல்லினை நாட்டினர்.
    விசேட வழிபாடுகளை  தொடர்ந்து இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் .







    No comments

    Post Bottom Ad