• Breaking News

    வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் எட்டாம்நாள் ரூபாய் நோட்டு அலங்காரம்!(படங்கள்,வீடியோ)

    வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம்  நாளான நேற்று 02-04 -2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல்மகோற்சவ   குரு சிவஸ்ரீ கமலேஸ்வர   குருக்கள் தலைமையில்  காலையில் சங்காபிசேகம் நடைபெற்று  பின்னர் தைலாப்பிய உற்சவத்துக்குரிய அபிசேகங்கள் இடம்பெற்று   வசந்தமண்டப  பூஜையின் பின் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது . 

    மீண்டும்  மாலை உற்சவத்துகுரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.





















































    Post Bottom Ad