வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கோபுரத்தின் மீது விழுந்த மின்னல்! (படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைக்கபட்டு வரும் இராஜகோபுரத்தின் மீது நேற்று (12.05.2017) வெள்ளிகிழமை பிற்பகல் 4.30மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தபோது கோபுரத்தின் உச்சியில் இடிமின்னல் தாக்கியது . இதனால் உச்சியில் அமைக்கபட்டிருந்த பொம்மை ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
கிராம மக்களை இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கே கோவில் கோபுரங்களை அமைத்து அதன்மீது இடிதாங்கும் சக்திபடைத்த கலசங்கள் வைக்கபடுவது வழமை எனினும் இது புதிதாக அமைக்கபட்டு வரும் கோபுரம் ஆகையால் மேற்படி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.