• Breaking News

    வவுனியா, வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2017


    ஈழவள நாட்டின் வடபால் வவுனியா நகரில் முத்தமிழ் விளங்கும் வேப்பங்குளம் பகுதியில் இந்து அன்பக பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ.சிவசுப்பிரமணிய சுவாமியின் தியானத்தினாலும் தேவியின் திருவருளினாலும் அமைக்கப்பட்ட இவ்வாலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் ஆனித்திங்கள் 11ம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும் புனர்பூச நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .
     20ம் நாள் (04.07.2017) செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரமும் துவாதசி திதியும் கூடிய சுப தினத்தில் அம்பாளுக்கு நவோத்திர சகஸ்ர சங்காபிஷேகம் (1008) நடைபெற்று மறுநாள் (05.07.2017) புதன்கிழமை பூங்காவனத்திருவிழாவுடனும், 06.07.2017 வைரவர் சாந்தியுடனும் நிறைவு பெற திருவருள் கூடியுள்ளது.






















    Post Bottom Ad