• Breaking News

    வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2019(படங்கள்)

    இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பதினோராம்  ஆண்டு  மகோற்சவ பெருவிழா நேற்று10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில்கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது.
    11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .

    மேற்படி மகோற்சவத்தில்
    17.02.2019  ஞாயிற்றுக்கிழமை  சப்பர திருவிழா
    18.02.2019  திங்கட்கிழமை   தேர்த்திருவிழா
    19.02.2019 செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா
    20.02.2019  புதன்கிழமை  பூங்காவன திருவிழாவும்  இடம்பெறுகின்றது.











    Post Bottom Ad