• Breaking News

    நான்கு இலங்கை சைவ ஆளுமைகளுக்கு திருக்கடவூரில் தருமை ஆதீன விருது!!

    நான்கு இலங்கை சைவ ஆளுமைகளுக்கு திருக்கடவூரில் தருமை ஆதீன விருது
    --
    திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில் 27.03.2022 இல்  தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் நான்கு இலங்கை ஆளுமைகளுக்கு நேற்றைய தினம் கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார்கள். 
    --
    நிகழ்வில்,  "சிவாகம கலாநிதி" என்னும் விருது நம் மரியாதைக்குரிய 
    யாழ்ப்பாணம் நயினாதீவு
    சிவஸ்ரீ. ஐ.கை. வாமதேவ சிவாச்சாரியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 
    --
    "திருமுறைக் கலாநிதி" என்னும் விருது 
     ஓய்வு பெற்ற யாழ்ப்பாணப் பல்கலக்கழகப் பேராசிரியர். நா.வி.மு நவரத்தினம் ஓதுவார் (நயினை) அவர்களுக்கு அளிக்கப்பட்டது. 
    --
     "பல்கலை வித்தகக் கலாநிதி"
    என்னும் விருது எம்மை பலவழிகளிலும் ஊக்குவிப்பவரும் தமிழ்- திருமுறை பதிப்பிலும் Thevaram.org தளம் வழி பெரும் சைவப்பணி செய்பவருமான காந்தளகம் 
    மறவன்புலவு க.சச்சிதானந்தம் (சிவசேனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. 
    --
     "நாதஸ்வரக் கலாநிதி"என்னும் விருது உலகளாவிய நிலையில் தன்னிகரில்லா ஆளுமையும், எளிமையான பண்புநலனும் ஒருங்கே பெற்ற நமது ஈழ நல்லூர் பாலமுருகன் அவர்களுக்கு தரப்பட்டது. 
    --
    நம்மவர்கள் நால்வருக்கு ஒரே நாளில் மதியை மாற்றும் அன்னையுடன் (அபிராமி)திகழ் விதியை மாற்றும் இறைவன் (அம்ருத கடேஸ்வரர்) திருமுன்றலில் கௌரவம் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களுக்கு எமது வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்.

    No comments

    Post Bottom Ad