நான்கு இலங்கை சைவ ஆளுமைகளுக்கு திருக்கடவூரில் தருமை ஆதீன விருது!!
நான்கு இலங்கை சைவ ஆளுமைகளுக்கு திருக்கடவூரில் தருமை ஆதீன விருது
--
திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில் 27.03.2022 இல் தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் நான்கு இலங்கை ஆளுமைகளுக்கு நேற்றைய தினம் கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார்கள்.
--
நிகழ்வில், "சிவாகம கலாநிதி" என்னும் விருது நம் மரியாதைக்குரிய
யாழ்ப்பாணம் நயினாதீவு
சிவஸ்ரீ. ஐ.கை. வாமதேவ சிவாச்சாரியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
--
"திருமுறைக் கலாநிதி" என்னும் விருது
ஓய்வு பெற்ற யாழ்ப்பாணப் பல்கலக்கழகப் பேராசிரியர். நா.வி.மு நவரத்தினம் ஓதுவார் (நயினை) அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
--
"பல்கலை வித்தகக் கலாநிதி"
என்னும் விருது எம்மை பலவழிகளிலும் ஊக்குவிப்பவரும் தமிழ்- திருமுறை பதிப்பிலும் Thevaram.org தளம் வழி பெரும் சைவப்பணி செய்பவருமான காந்தளகம்
மறவன்புலவு க.சச்சிதானந்தம் (சிவசேனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
--
"நாதஸ்வரக் கலாநிதி"என்னும் விருது உலகளாவிய நிலையில் தன்னிகரில்லா ஆளுமையும், எளிமையான பண்புநலனும் ஒருங்கே பெற்ற நமது ஈழ நல்லூர் பாலமுருகன் அவர்களுக்கு தரப்பட்டது.
--
No comments