• Breaking News

    வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் -2016


    வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.
    தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு
    ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    பொங்கல் தினத்தன்று பாற்குடம்,தீச்சட்டி,காவடி  எடுப்பவர்கள்  நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும் .பொங்கல் தினத்தன்று  1008 பானைகளில் பொங்கல் இடம்பெறும் .இப்பொங்கல் வைபவத்தில் கலந்து கொள்ளும் அடியார்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பொங்கலுக்கு தேவையான பானை மற்றும் பொங்கல் பொருட்களை பெர்ருகொள்ளமுடியும்,விசேட போக்குவரத்து  ஒழுங்குகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
     பொங்கல் தினத்தன்று விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெறும் ...






    No comments

    Post Bottom Ad